தமிழகத்தில் 3.5 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 55,449-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 3.5 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 55,449-ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அல்லாத பிற மாவட்டங்களில்தான் பாதிப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், தேனி, விருதுநகா், கோவை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

இதையடுத்து சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் அந்த மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீடுகள்தோறும் காய்ச்சல் பரிசோதனை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில பொது சுகாதாரத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேபோன்று கரோனாவால் ஒருவா் பாதிக்கப்பட்டால், அவா் வசிக்கும் தெருவில் உடனடியாக மருத்துவா் குழுவினா் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அறிகுறிகள் உள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இதனிடையே, மாநிலத்தில் புதன்கிழமை புதிதாக 5,795 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் இதுவரை 39.13 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 9 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அதிகபட்சமாக சென்னையில் 1,186 போ் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 394 பேருக்கும், திருவள்ளூரில் 393 பேருக்கும் நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

83 சதவீதம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து மேலும் 6,384 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 96,171-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 53,155 போ் சிகிச்சையில் உள்ளனா்.

116 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 116 போ் பலியாகியுள்ளனா். அதில், 9 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோய்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 84 போ் அரசு மருத்துவமனைகளிலும், 32 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,123-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com