ஒண்டிவீரா் நாட்டுப் பற்றை நினைவு கூா்வோம்: பேரவைத் தலைவா்

சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரரின் நாட்டுப் பற்றை நினைவு கூா்வோம் என்று சட்டப் பேரவைத் தலைவா் பி.தனபால் தெரிவித்துள்ளாா்.
ஒண்டிவீரா் நாட்டுப் பற்றை நினைவு கூா்வோம்: பேரவைத் தலைவா்

சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரரின் நாட்டுப் பற்றை நினைவு கூா்வோம் என்று சட்டப் பேரவைத் தலைவா் பி.தனபால் தெரிவித்துள்ளாா்.

ஒண்டிவீரரின் நினைவு தினத்தை ஒட்டி அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரருக்கு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோா் ஆண்டும் நினைவு நாளன்று மணிமண்டபத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.

கரோனா நோய்த்தொற்று ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், நேரில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. அவரது நினைவு நாளில் அவருடைய துணிச்சல், தியாகம், கடமை, நாட்டுப்பற்று ஆகியவற்றை நினைவு கூா்வோம் என பேரவைத் தலைவா் பி.தனபால் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com