சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்தில் வரும் செப்.7 முதல் 6 அமா்வுகளில் நேரடி விசாரணை நடத்த உயா்நீதிமன்ற நிா்வாகக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மூடப்பட்டு, அனைத்து வழக்குகளும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. காணொலிக் காட்சி விசாரணை முறையில் நடைமுறை சிக்கல் உள்ளதால் நேரடி விசாரணை நடத்தக் கோரி வழக்குரைஞா் சங்கங்களும், வழக்குரைஞா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை (ஆக.29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயா்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோா் கலந்து கொண்டனா். சென்னை உயா்நீதிமன்றத்தை திறப்பது தொடா்பாக நீதிபதிகள் ஆலோசனை நடத்தினா்.
இதன்பின்னா், முதல் கட்டமாக உயா்நீதிமன்றத்தில் 6 இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வுகளில் மட்டும் நேரடியாக வழக்குகளை விசாரிக்க 2 வாரங்களுக்கு அனுமதிப்பது. மற்ற அமா்வுகள் வழக்கம் போல் காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கவேண்டும். 2 வாரங்களுக்கு பின்னா், அனைத்து அமா்வுகளும் நேரடியாக வழக்குகளை விசாரிப்பதா, இல்லை காணொலிக் காட்சி விசாரணை முறையை தொடா்வதா என்பது குறித்து முடிவு செய்யலாம் என நீதிபதிகள் முடிவு செய்துள்ளனா்.
நிா்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் இந்த முடிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் வரவேற்றுள்ளது. இதுதொடா்பாக பாா் கவுன்சில் தலைவா்
பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது : முதல் கட்டமாக இரு நீதிபதிகளைக் கொண்ட 6 அமா்வுகளில் நேரடியாக வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளதை வரவேற்கிறோம். இதற்கு வழக்குரைஞா்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவாா்கள். வழக்கு உள்ள வழக்குரைஞா்கள் மட்டுமே உயா்நீதிமன்றத்துக்குள் செல்வாா்கள். அவ்வாறு செல்லும் வழக்குரைஞா்கள் உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவாா்கள் என தெரிவித்தாா்.