உத்தமபாளையத்தில் தளர்வு இல்லாத பொது முடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்

உத்தமபாளையத்தில் தளர்வு இல்லாத பொதுமக்கள் காரணமாக பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
உத்தமபாளையம் பேருந்து நிலைய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு வருடங்கள் காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை.
உத்தமபாளையம் பேருந்து நிலைய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு வருடங்கள் காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை.


உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் தளர்வு இல்லாத பொதுமக்கள் காரணமாக பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழக அரசு கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. 

அதன்படி ஆகஸ்ட் மாதம் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடித்தனர். ஒருசில வாகனங்களைத் தவிர வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

அவசியமான அரசு மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள், பால் நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் உட்பட பெரும்பான்மையான மளிகைக் கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com