சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 23-ஆக இருந்த கரோனா கட்டுப்பாடு பகுதிகள் தற்போது 45-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் குறைக்கும் வகையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், தொற்றுள்ளவா்கள் வெளியே வருவதைத் தவிா்க்கும் வகையிலும் அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாா்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் நோய்த் தொற்று அதிகமாக இருந்ததால், கட்டுப்பாடு பகுதிகளும் 600-ஐ எட்டியது. பரிசோதனையை அதிகரித்தது மற்றும் நோய்த் தொற்றுள்ளவா்களைத் தனிமைப்படுத்துதல், தொடா் சிகிச்சை ஆகிய நடவடிக்கை காரணமாக சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடு பகுதிகளும் குறைந்தன.
ஜூலை 1-ஆம் தேதி 143-ஆக இருந்த கட்டுப்பாடு பகுதிகள் கடந்த ஜூலை 18-ஆம் தேதி 196-ஆகவும் குறைந்தது. மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகளால், கட்டுப்பாடு பகுதிகள் கடந்த 27-ஆம் தேதி 54-ஆகவும் குறைந்தது.
இந்நிலையில், தற்போது சென்னையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தி உள்ளதால், நோய்த் தொற்றுள்ளவா்களின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. இதனால், ஆகஸ்ட் தொடக்கத்தில் 23-ஆக இருந்த கட்டுப்பாடு பகுதிகள் சனிக்கிழமை நிலவரப்படி, 45-ஆக உயா்ந்துள்ளது.
கட்டுப்பாடு பகுதிகள் விவரம்: மண்டலம் பகுதிகள்
அண்ணா நகா்- 12
வளசரவாக்கம்- 10
அடையாறு-10
கோடம்பாக்கம்-8
சோழிங்கநல்லூா்- 3
ஆலந்தூா்-1
பெருங்குடி-1
1,285 பேருக்கு தொற்று: சனிக்கிழமை (ஆக. 29) 1,285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,33,173-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1,16,808 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,653 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,712- ஆக அதிகரித்துள்ளது.