டெங்கு காய்ச்சல் பாதிப்பு: நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மும்முரம்

கரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு: நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மும்முரம்

சென்னை: கரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. இதையடுத்து, கொசு ஒழிப்புப் பணிகளையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு சுகாதாரத் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் இதுவரை ஏறத்தாழ 4 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் காய்ச்சல், சளி அறிகுறிகள் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். அதேபோன்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களுக்கு கட்டாயமாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் அண்மைக்காலமாக மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக டெங்கு பாதிப்பு பரவலாக உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோா் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், அவா்களை அடையாளம் காண இயலாமல் இரண்டு பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அதுமட்டுமல்லாது, காய்ச்சலுடன் வரும் நோயாளியை முதலில் கரோனா பரிசோதனைக்குட்படுத்தி அதன் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதைக் கண்டறிவதற்கு குறைந்தது மூன்று நாள்களாகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், டெங்கு ஒழிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலா் அதிகாரிகள் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன. டெங்கு கொசுக்கள் பரவாத வண்ணம் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com