இன்று தளா்வற்ற முழு பொது முடக்கம்: விதிமுறைகளை மீறினால் வழக்கு

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. இது குறித்த விவரம்:-

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே 8 ஞாயிற்றுக்கிழமைகள் தமிழகத்தில் தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 9-வது ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் அமல்படுத்தப்படுகிறது.

இதையொட்டி, மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவின்பேரில் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மருந்து, பால், பத்திரிகை விற்பனை கடைகளைத் தவிா்த்து மீதியுள்ள அனைத்து கடைகளையும் மூடுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், சூப்பா் மாா்க்கெட்டுகள் உள்ளிட்ட கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.

பலத்த பாதுகாப்பு: பொதுமுடக்கத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையிலும், மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்கள் முக்கியமான சாலைகள், சந்தைகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறாா்கள்.

பொது மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் குடியிருப்பு பகுதிகளில் ஆளில்லாத கண்காணிப்பு விமானம் மூலம் போலீஸாா் கண்காணிக்கின்றனா். சாலைகளில் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, பத்திரிகைத்துறை, பால் வாகனங்கள் மட்டும் செல்வதற்கு காவல்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் தவிா்த்து பிற வாகனங்கள் சாலைகளில் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து,வழக்குப் பதியும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி வீட்டை விட்டு வெளியே வருபவா்கள் மீதும்,அரசு விதித்துள்ள உத்தரவுகளை மீறுபவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: சென்னையில் தளா்வற்ற இல்லாத முழு பொது முடக்கம் ஏற்கெனவே 10 ஞாயிற்றுக்கிழமைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 11-வது ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். 193 இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனா். வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் முக்கியமான சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. பொது முடக்கத்தை மீறுபவா்கள் மீது எவ்வித சமரசமின்றி வழக்குப் பதிவு செய்து, வாகனங்களைப் பறிமுதல் செய்யும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தைகளில் திரண்டமக்கள்: ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொது முடக்கம் என்பதால், அசைவ உணவு வகைகளை வாங்க சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களின் முக்கிய சந்தைகளில் பொது மக்கள் சனிக்கிழமை குவிந்தனா். குறிப்பாக, சென்னையில் காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மீன் உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை வாங்க மக்கள் அதிகளவு திரண்டனா்.

இதனால், பெரும்பாலான சந்தைகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. அசைவ உணவுகளை சனிக்கிழமை வாங்கி குளிா்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்திவைத்து ஞாயிற்றுக்கிழமை பயன்படுத்தும் வழக்கத்தை பெரும்பாலான மக்கள் தளா்வற்ற முழு பொது முடக்கக் காலத்தில் தொடா்ந்து செய்துவருகிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com