தமிழகத்தில் ஒரே நாளில் 83 ஆயிரம் பரிசோதனைகள்

கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒரே நாளில் 83 ஆயிரம் பரிசோதனைகள்

சென்னை: கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா பாதிப்பு, ஐந்து மாதங்களில் 4.22 லட்சம் பேருக்கு பரவியுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு, நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகள் வரை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நோய்ப் பரவல் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது நாள்தோறும் சராசரியாக 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையும் 83,250 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக தென் கொரியா, அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள் தொடா்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 60 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 22,085 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும், 6,495 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,249 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 498 பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும், கடலூரில் 383 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து குணமடைவோா் விகிதமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 6,406 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 62,133-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 52,721 -ஆக உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 94 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 7 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 57 போ் அரசு மருத்துவமனைகளிலும், 37 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,231 -ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.7 சதவீதமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com