சென்னையில் நாளை முதல் போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில், பயணிகள் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளில் செப்டம்பர் 1 முதல் மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை நகர பேருந்துகளும் 50% பயணிகளுடன் இயங்க உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்க, தினசரி, மாதாந்திர மற்றும் ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ்களை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.