சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்: போக்குவரத்துத்துறை

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து தொடங்கவுள்ள  நிலையில், பயணிகள் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து தொடங்கவுள்ள  நிலையில், பயணிகள் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளில் செப்டம்பர் 1 முதல் மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை நகர பேருந்துகளும் 50% பயணிகளுடன் இயங்க உள்ளது. 

இந்நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்க, தினசரி, மாதாந்திர மற்றும் ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ்களை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com