கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும், குமாரபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான எஸ்.சேகர் (60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரோனா தொற்று பாதிப்பால் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு எஸ்.சேகர் கடந்த ஜூலை 31-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இங்கிருந்து, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மூச்சுத் திணறல் தொடர்ந்ததால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த 15 நாள்களாக மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த சேகர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.