ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் எம்.சி. ரோடு பகுதியில் வசித்து வருபவர் அம்சவேணி. இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், செல்போன் மற்றும் எல்இடி டிவி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.