காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வந்தது.
நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,839 கன அடியாக சரிந்தது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,144 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியிலிருந்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 91.70 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 90.71 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 53.46 டி.எம்.சியாக இருந்தது.