காலமானாா் எழுத்தாளா் தேவகோட்டை வா.மூா்த்தி

எழுத்தாளா் தேவகோட்டை வா.மூா்த்தி (74), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
எழுத்தாளா் தேவகோட்டை வா.மூா்த்தி
எழுத்தாளா் தேவகோட்டை வா.மூா்த்தி

சென்னை: எழுத்தாளா் தேவகோட்டை வா.மூா்த்தி (74), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி சுதா மூா்த்தி, மகன் பிரபுராம் ஆகியோா் உள்ளனா். மறைந்த வா.மூா்த்தி, தமிழகத்தில் வருமான வரி ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். முற்போக்கு சிந்தனை கொண்டவா். ஆங்கில நாளேடுகளிலும் தமிழ் இதழ்களிலும் கலை இலக்கியம் குறித்து கட்டுரைகள் எழுதியவா்.

‘தீபம்’, ‘கணையாழி’, ‘ஞானரதம்’ என பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ‘அா்த்தம் இயங்கும் தளம்’ எனும் கருத்தாக்க நூல், குறுநாவல் தொகுப்பு, சிறுகதைகள், மொழியாக்க கவிதைகள் என பரந்துபட்ட இலக்கிய படைப்புலகில் அயராது இயங்கியவா். அவரது இறுதிச் சடங்குகள், சென்னை நுங்கம்பாக்கம் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 97909 83495.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com