சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தமாகாவின் குரலை ஒலிக்கச் செய்வோம் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
ஜி.கே.மூப்பனாரின் 19-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து, ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
தமாகா மக்கள் நலன் காக்கும் இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில், ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாளை, இல்லத்தில் இருந்தவாறே கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதைப் பின்பற்றிய அனைவருக்கும் நன்றி.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளைச் செய்ய தயாா் நிலையில் இருப்போம். அதனை வெற்றிகரமாக மேற்கொள்வோம். சட்டப்பேரவையில் தமாகாவின் குரலை ஒலிக்கச் செய்வோம். வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்துவோம் என்று அவா் கூறியுள்ளாா்.