புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே முன்னாள் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கூலித் தொழிலாளர் இருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ராவுசப்பட்டி தாலுக்கா தாழம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன் மகன் மாரிமுத்து (48), இவரது உறவினர் கருப்பையன் மகன் ரமேஷ் (45) இருவரும் சென்ட்ரிங் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள், இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் இரவு ஊருக்கு புதுகை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆதனக்கோட்டை அருகில் உள்ள பெட்ரோல் பங்கு அருகே வந்து கொண்டிருந்த போது முன்னாள் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவயிடத்தில் பலியானார். படுகாயமடைந்த ரமேஷ்யை அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி ரமேஷ் இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.