எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்

​பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்


பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம், தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவருடைய தற்போதைய உடல்நிலை சீராக உள்ளது. நினைவுடன் உள்ள அவரால் பிறர் பேசுவதை உணர்ந்து பதிலளிக்க முடிகிறது. பிசியோதெரபி சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு தருகிறார். பல்துறை மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது."

கடந்த 5-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com