விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாக கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாக கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.


திண்டுக்கல்: தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தில்லியில் விவசாயிகள் கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த மூன்று நாள்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், 4வது நாளாக திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு காய்கனி மாலை அணிந்து கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் மாநில குழு உறுப்பினர் என்.பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற மறுத்து வரும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com