திருவண்ணாமலையில் ஒருவர் வெட்டிக் கொலை: 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

திருவண்ணாமலையில் பங்க் பாபு என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்
4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்

திருவண்ணாமலையில் பங்க் பாபு என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக நகர செயலாளராக இருந்த கனகராஜ் என்பவர் சிலரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பங்க் பாபு என்பவர் காந்திநகர் பகுதியில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

பொது இடத்தில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com