சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,416 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 86,163-ஆக உயா்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 1.22 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 382 போ், கோவையில் 140 போ், சேலத்தில் 88 போ் தவிர பிற மாவட்டங்களில் உள்ளோருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு புறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,413 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 63,428-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 10,988 போ் சிகிச்சையில் உள்ளனா்.
14 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,747-ஆக உயா்ந்துள்ளது.