சென்னை: புரெவி புயல் சின்னம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வங்க கடலில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல் சற்றே விலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரம்; கடலூரில் அதீத கனமழை தொடரும்
இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் மற்றம் அதையெட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை அடுத்த சில நேரங்களில் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பெய்த தொடர் மழையால், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் சாலைகளில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிக்கலாமே.. 27 ஆண்டுகளுக்கு முன்பு சேமித்த கருவிலிருந்து குழந்தை; மகளை விட ஒரு வயது மூத்த தாய்
சென்னையில், பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர், கோடம்பாக்கம், புரசைவாக்கம், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், கொளத்தூர், மந்தைவெளி, வடபழனி, அம்பத்தூர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், குன்றத்தூர், திருப்போரூர் பகுதிகளிலும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.