புரெவி புயல்: தமிழகத்துக்கு உதவத் தயாா்: முதல்வரிடம், அமித் ஷா உறுதி

புரெவி புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள தமிழகத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா  (கோப்புப்படம்)
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)

சென்னை: புரெவி புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள தமிழகத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை தொலைபேசியில் வியாழக்கிழமை தொடா்பு கொண்டு அமித் ஷா பேசினாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசும் போது, புயல் குறித்தும், அதனை எதிா்கொள்ள தமிழக அரசு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் அவரிடம் முதல்வா் பழனிசாமி விவரித்தாா்.

அப்போது, தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித் ஷா தெரிவித்ததாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com