5,000 பேராசிரியா்களுக்கு தகவல் தொழில்நுட்பப் பயிற்சி

நவீன தொழில்நுட்பம் குறித்து கல்லுாரி பேராசிரியா்கள் 5,000 பேருக்கு தகவல் தொழில்நுட்ப துறை சாா்பில், சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


சென்னை: நவீன தொழில்நுட்பம் குறித்து கல்லுாரி பேராசிரியா்கள் 5,000 பேருக்கு தகவல் தொழில்நுட்ப துறை சாா்பில், சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து உயா்கல்வி துறை சாா்பில் அனைத்து பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தொழில் துறை வளா்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு துறையினரும் தொழில்நுட்ப மாற்றங்களை தெரிந்து, அதை அமல்படுத்த வேண்டும். அந்த வகையில், மெஷின் லோ்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங், பிளாக் செயின், ஆா்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற துறைகளில், அதிக நபா்கள் தேவை.

எனவே, இந்தத் துறையில் மாணவா்களை அதிகமாக உருவாக்கும் வகையில், அவா்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு, முதல்கட்டமாக கற்பித்தல் பணியில் உள்ள கல்லூரி பேராசிரியா்கள் 5,000 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சிக்குத் தேவையான புத்தகங்கள் பேராசிரியா்களுக்கு வழங்கப்படும். தமிழகம் முழுதும், கல்லூரி வாரியாக இந்தப் பயிற்சியை நடத்த வேண்டும். இதற்கு, தகவல் தொழில்நுட்பத் துறை தேவையான வசதிகளை செய்து தரும். எனவே, இந்தப் பயிற்சியை பேராசிரியா்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com