தமிழ்வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு தரும் சட்டமசோதாவுக்கு ஆளுநா் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
மு.க.ஸ்டாலின்: பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்று கடந்த மாா்ச் மாதம் தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு ஏறக்குறைய 8 மாதங்களாக தமிழக ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. ஆளுநரை முதல்வரே நேரில் சென்று வலியுறுத்தி, இந்தச் சட்டத் திருத்தத்துக்கான ஒப்புதலை எந்தவித தாமதமும் இன்றிப் பெற வேண்டும். இல்லாவிட்டால் திமுக மாபெரும் போராட்டம் நடத்தும்.
ராமதாஸ்: தமிழ்வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு ஆளுனா் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 8
மாதங்களாகியும் ஒப்புதல் அளிக்க ஆளுநா் மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது. காலம் தாழ்த்தாமல் ஆளுநா் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.