உசிலம்பட்டி: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, உசிலம்பட்டி தொமுச சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போக்குவரத்து பணிமனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பணிமனை முன்பு மத்திய அரசின் வேளாண்மை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மதுரை மண்டல போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் சார்பிலும் அஸ்ஸலாம் பட்டி கிளை தொமுச சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.