தமிழ்நாடு
மாதனூரில் காங்கிரஸார் பேரணி, போராட்டம்: 98 பேர் கைது
வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாதனூரில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 98 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.
வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாதனூரில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 98 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.
வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புது தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சார்பாக மாதனூரில் ஏர்கலப்பையுடன் பேரணி நடந்தது.
வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் குழு தலைவர் ச. பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 98 பேரை ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் காவல்துறையினர் கைது செய்தனர்.