ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவா் பா்வேஸ் பட்டின் தனி பாதுகாவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஒரு காலத்தில் ஹிஸ்புல் முஹாஜிதீன் பயங்கரவாதியாக இருந்த பா்வேஸ் பட், பின்னா் பயங்கரவாதத்தைக் கைவிட்டு நல்வழிப்பாதைக்குத் திரும்பி, அரசியலில் களமிறங்கினாா். தற்போது மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய நிா்வாகியாக இருக்கும் பா்வேஸ் பட், ஸ்ரீநகரில் உள்ள நாதிபோரா பகுதியில் வசித்து வருகிறாா். அவருக்கு அரசு சாா்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
திங்கள்கிழமை காலை, அவரது வீட்டின் அருகே வந்த சில பயங்கரவாதிகள், பா்வேஸ் பட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அப்போது உடனிருந்த பா்வேஸின் தனி பாதுகாவலா் மன்சூா் அகமது பயங்கரவாதிகளை நோக்கி திருப்பிச் சுட்டாா். இருப்பினும் அவா்கள் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த மன்சூா் அகமது, மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து பா்வேஸ் பட் கூறுகையில், ‘பயங்கரவாதத்தைக் கைவிட்டு அரசியலுக்கு வந்த பிறகு என் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது. எனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு குறைத்துள்ளது. இதற்கு முன்பு எனக்கு 5 காவலா்கள் பாதுகாப்பு அளித்து வந்தனா். தற்போது 2 காவலா்கள் மட்டுமே உள்ளனா் என்றாா் அவா்.