விழுப்புரம் மாவட்டத்தில் 23 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், மருத்துவமனை இல்லாத கிராமப்புறப் பகுதிகளில் 2000 மினி கிளினிக்குகள் அரசு சார்பில் தொடங்கப்படுகிறது.
இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 23 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று விழுப்புரம் அருகே வடவாம்பலம், வி அகரம், பணம்பட்டு, திருப்பாச்சினர், காவணிப்பாக்கம், ஆசை குளம், கோனூர் உள்ளிட்ட 7 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கி வைத்தார்.