சென்னை: அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை அனுப்புமாறு அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், பணியாளர்களில் மருத்துவ விடுப்பு மற்றும் கரோனா நோய்த்தொற்று காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு தவிர, அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள், பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்து உடனே அனுப்புமாறு அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.