இது ட்வீட்டில் அடங்காத் துயரம்: தொ.ப மறைவு குறித்து கமல் உருக்கம்

இது ட்வீட்டில் அடங்காத் துயரம் என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு குறித்து மநீம தலைவர் கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இது ட்வீட்டில் அடங்காத் துயரம் என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு குறித்து மநீம தலைவர் கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இது ட்வீட்டில் அடங்காத் துயரம் என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு குறித்து மநீம தலைவர் கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை: இது ட்வீட்டில் அடங்காத் துயரம் என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு குறித்து மநீம தலைவர் கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழறிஞர் தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நெல்லை மனோனன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் தொ.பரமசிவன் (70). இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று இரவு 7.45-க்கு காலமானார். அழகர் கோயில், அறியப்படாத தமிழகம் போன்ற நூல்கள் இவரின் முக்கிய படைப்புகளாகும்.

தமிழில் இயங்கி வந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராக தொ.பரமசிவன் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இது ட்வீட்டில் அடங்காத் துயரம் என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு குறித்து மநீம தலைவர் கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம்’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com