கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33 வது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை நகர செயலாளர் பிகே சிவானந்தம் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி ,தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி. தேவேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் என். இளையராஜா, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், ஒன்றிய அவைத்தலைவர் கே.ஆர். சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊத்தங்கரையில் அதிமுக கட்சி சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு.
சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் கலந்துகொண்டு எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஒன்றிய பொருளாளர் சேட்டு குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் கே.ஆர்.வேடியப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கல்லாவி ராமன், நடுப்பட்டி குப்புசாமி, பெரிய கட்டகுலம் ரம்யா ஐயப்பன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் சக்திவேல், சிக்னல் ஆறுமுகம், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.