சென்னை: சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குள சுவர் மற்றும் நாகூர் தர்கா குளத்தின் சுவரை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தின் சுற்றுச்சுவரை ரூ.2.64 கோடியிலும், நாகூர் தர்கா குளத்தின் சுவரை ரூ.5.37 கோடியில் சீரமைத்து தருவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.