வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிமிர்வு கலையகம் அமைப்புடன் இணைந்து இன்று 12 மணி முதல் 1 மணி வரை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பறையாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

வரும் ஞாயிற்றுக்கிழமை 6.30 மணி முதல் 8.30 மணி வரை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

நாளை (சனிக்கிழமை) சென்ட்ரல் மெடரோ, விமான நிலையம் மெட்ரோ, திருமங்கலம் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆன் தி ஸ்டீரீட் ஆஃப் சென்னை கலைக்குழுவினரின் மெல்லிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com