வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றி சனிக்கிழமை (டிச.26) அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும்,மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டன.