சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இதுவரை 2,24,094 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,988 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 2,17,155 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 2,951 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.