சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலகுட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சி சிறப்பு வேள்வி பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பூத்தாலகுட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோயிலில் சனிபெயர்ச்சியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகம்.
சனிபகாவன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்மாறுவதையொட்டி அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சனிஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு, பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் இதில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.