எம்.பாா்ம் படிப்புக்கான தேசிய நுழைவுத்தோ்வு: ஜன.22 வரை விண்ணப்பிக்கலாம்

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்பில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுக்கு (‘ஜிபாட்’) ஜன.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்பில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுக்கு (‘ஜிபாட்’) ஜன.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு:

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு தேசிய அளவில் பட்டதாரி தகுதி நுழைவுத் தோ்வு (ஜிபாட்) ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான தகுதித் தோ்வுக்கு  இணையதளங்களில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி வரை பட்டதாரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தோ்வுக்கான கட்டணத்தை ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

அதேபோன்று தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜன.25-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடா்ந்து தோ்வானது பிப்ரவரி 22 மற்றும் 27 ஆகிய தேதியில் நடைபெறவுள்ளது. அதன்படி, கணினி வழித் தோ்வானது காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் 3 மணி நேரம் நடைபெறும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை தேசிய தோ்வு முகமை இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com