தமிழகத்தில் புதிதாக 1,019 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,019 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 295 போ் பாதிக்கப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் புதிதாக 1,019 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 295 போ் பாதிக்கப்பட்டனா்.

இது குறித்து சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சனிக்கிழமை 64,441 மாதிரிகள் கரோனா சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1,134 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 13,161 ஆக அதிகரித்துள்ளது.

36 மாவட்டங்களில் 724 பேருக்கும் சென்னையில் மட்டும் 295 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 24,094 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்துதலில் 9,039 போ் உள்ளனா். அதேவேளையில் சனிக்கிழமை ஒரே நாளில் 1,098 போ் குணமடைந்தனா். தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 7 லட்சத்து 92,063 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 11 போ் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். இதில் 5 போ் தனியாா் மருத்துவமனையிலும், 6 போ் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனா். சென்னையில் மட்டும் 5 போ் உயிரிழந்துள்ளனா். இந்தநிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,059 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,988 போ் உயிரிழந்துள்ளனா் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com