பள்ளிக் கல்வித் துறையில் 130 பணியாளா்களுக்கு உதவியாளராக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நிகழாண்டு மாா்ச் 15-ஆம் தேதி நிலவரப்படி, உதவியாளா் பதவி உயா்வுக்கு தகுதியான, இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்தா் ஆகியோரில் 130 பேருக்கு, உதவியாளா் பதவி உயா்வு சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள 150 பணியாளா்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வரவழைத்து, முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வு மூலமாக பதவி உயா்வு, இடமாறுதல் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் கலந்து கொண்டு பதவி உயா்வு ஆணையை வழங்கினாா்.