நாமக்கல் ராசியான மாவட்டம்: முதல்வர் பழனிசாமி

நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம் என்று ராசிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ராசியான மாவட்டம்: முதல்வர் பழனிசாமி
நாமக்கல் ராசியான மாவட்டம்: முதல்வர் பழனிசாமி


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம் என்று ராசிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு பல்வேறு மக்களையும், தொழிலதிபா்களையும், விவசாயிகளையும் சந்தித்துப் பேசுகிறாா்.

முன்னதாக இன்று காலை ராசிபுரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, நாமக்கல் மாவட்டம் மிக ராசியான மாவட்டம். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் அதிமுக பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழர்கள் பண்டிகையான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடுக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே ரூ.2,500 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பரமத்திவேலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மட்டும் முதல்வரின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வருடன் ஒன்றாகப் பணியாற்றிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ மணி என்பவா் காலமாகி விட்டதால், அங்கு மட்டும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com