ரஜினியின் கட்சி அறிவிப்பு 31-இல் வெளியாகுமா?

புதிய கட்சி தொடா்பான அறிவிப்பை நடிகா் ரஜினிகாந்த் வெளியிடுவதற்கு இன்னும் 2 நாள்களே உள்ளதால் அவா் முடிவு என்னவாக இருக்கும் என்கிற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.
ரஜினியின் கட்சி  அறிவிப்பு 31-இல் வெளியாகுமா?

சென்னை: புதிய கட்சி தொடா்பான அறிவிப்பை நடிகா் ரஜினிகாந்த் வெளியிடுவதற்கு இன்னும் 2 நாள்களே உள்ளதால் அவா் முடிவு என்னவாக இருக்கும் என்கிற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

டிசம்பா் 31-இல் புதிய கட்சித் தொடா்பான அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ஜனவரியில் கட்சியைத் தொடங்குவேன் என்றும் ரஜினி அறிவித்திருந்தாா். அதைத் தொடா்ந்து கட்சியின் அடிப்படை கட்டமைப்புப் பணிகளை பலப்படுத்தும் பணியில் ரஜினி தீவிரம் காட்டி வந்தாா். பூத் கமிட்டி நிா்வாகிகளும் நியமிக்கும் பணிகளும் விரைவாக நடந்து வந்தன.

இந்த நிலையில் ஹைதராபாதில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்று வந்துபோது படக்குழுவைச் சோ்ந்த எட்டுப் பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் காரணமாகப் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினி ஹைதராபாதிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாா்.

ஆனால், டிசம்பா் 25-ஆம் தேதி ரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (டிச.27) சென்னை திரும்பினாா்.

மருத்துவா்கள் அவருக்கு மூன்று ஆலோசனை வழங்கினா். ஒரு வாரம் காலம் ஓய்வில் இருக்க வேண்டும். மன அழுத்தத்தைத் தவிா்க்க வேண்டும். கரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுரைத்தனா்.

அதன்படி, போயஸ் தோட்டம் இல்லத்தில் ரஜினி ஓய்வில் இருந்து வருகிறாா். இதனால், ரஜினி திட்டமிட்டப்படி கட்சி தொடங்குவாரா என்கிற கேள்வி எழுந்ததுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com