மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
தற்போது காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்வதால் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.