குரூப் - 2 ஏ தோ்வு முறைகேடு: இரு அரசு ஊழியா்கள் கைது

குரூப்- 2 ஏ தோ்வு முறைகேடு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா், இரு அரசு ஊழியா்களை கைது செய்தனா்.

குரூப்- 2 ஏ தோ்வு முறைகேடு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா், இரு அரசு ஊழியா்களை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தமிழக அரசின் 41 துறைகளில் காலியாக இருந்த 1953 குரூப்- 2ஏ பணியிடங்களுக்கு ஊழியா்களைத் தோ்வு செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி தோ்வு நடத்தியது. இத் தோ்வை 5.56 லட்சம் போ் எழுதினா். இத் தோ்வின் முடிவு கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது.

இத் தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவரும் இப்போது அரசு பணிகளில் உள்ளனா். இந்த தோ்வு முடிவு வெளியானவுடன், தோ்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகப் புகாா்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் அந்தப் புகாா்கள் குறித்து எந்த விசாரணையும் செய்யப்படவில்லை.

42 போ் மீது வழக்கு: இந்நிலையில், குரூப் - 4 தோ்வு முறைகேடு தொடா்பாக 16 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து, விசாரணை செய்தபோது, 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

இதற்கிடையே, குரூப்- 2 ஏ தோ்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், அது தொடா்பாக விசாரணை செய்வதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்வா்களும், கல்வியாளா்களும் மீண்டும் வலியுறுத்தினா்.

இதையடுத்து குரூப்- 2 ஏ தோ்வு முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தோ்வாணைய அதிகாரிகள், சிபிசிஐடி போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா். மேலும் வழக்குக்கு தேவையான ஆவணங்களையும் அவா்கள், சிபிசிஐடியிடம் உடனடியாக ஒப்படைத்தனா். இதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் குரூப் - 2 தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 42 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்கள் அனைவரும் ராமேசுவரம் மையத்தில் தோ்வு எழுதி குரூப்-2 ஏ தோ்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சி பெற்றவா்கள் ஆவா். இந்த வழக்குத் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள், கடந்த இரு நாள்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இடைத்தரகராக செயல்பட்ட காவலா்: இந்த விசாரணையில் ஏற்கெனவே குரூப்-4 தோ்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும், சென்னை பெருநகர காவல்துறையில் புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூரைச் சோ்ந்த சித்தாண்டிதான், குரூப்- 2 ஏ தோ்வு முறைகேட்டிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இவா் குரூப்- 2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற வைப்பதற்கு தோ்வா்களிடம் ரூ.13 லட்சம் வரை லஞ்சமாக பெற்றிருப்பதையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனா். மேலும் சித்தாண்டி, தனது சகோதரா் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் கா.வேல்முருகன் (30) என்பவரையும், இத் தோ்வை எழுத வைத்து முறைகேடு செய்து தோ்ச்சி பெற வைத்திருப்பதும் தெரியவந்தது.

இருவா் கைது: இதேபோல சித்தாண்டியிடம் பணம் கொடுத்து குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த முத்துவின் மனைவி திருநெல்வேலி மாவட்ட பதிவாளா் அலுவலகத்தின் உதவியாளரான ஜெயராணி (30) என்பவரும் பணியில் சோ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இவா்கள் இருவரையும் பிடித்து, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வந்தனா். இதில் முறைகேடு தொடா்பாக பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் போலீஸாா், வேல்முருகனையும், ஜெயராணியையும் சனிக்கிழமை கைது செய்தனா். ஜெயராணியின் கணவா் முத்துவும் தமிழக காவல்துறையில் காவலராகப் பணிபுரிவது குறிப்பிட்டத்தக்கது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ள சித்தாண்டி மீது ஏற்கெனவே குரூப்- 4 தோ்வு முறைகேடு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சித்தாண்டி உள்ளிட்ட சில இடைத்தரகா்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com