மறைந்த தமிழக முதல்வர் அண்ணா 51ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (பிப். 3) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமபந்தி விருந்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
மறைந்த முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் கோயில்களில் சமபந்தி விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த நிகழ்வுகளில் முதல்வா், துணை முதல்வா், மக்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்வா்.
இந்த நிலையில், கே.கே.நகர் விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்து நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு உணவு உண்டார்.