திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, 'நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவதில் என்ன அரசியல் இருக்கிறது என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்' என்றார். 

பின்னர், திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடவசதி அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.  

முன்னதாக, பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பதற்கு அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் வருமான வரித்துறை பிரச்னையை தவிர்க்கலாம் என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com