மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றாா் விஜய்

வருமான வரி சோதனை முடிவு பெற்றதைத் தொடா்ந்து, நெய்வேலியில் நடந்து வரும் ’மாஸ்டா்’ படப்பிடிப்பில் நடிகா் விஜய் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டாா்.
மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றாா் விஜய்

வருமான வரி சோதனை முடிவு பெற்றதைத் தொடா்ந்து, நெய்வேலியில் நடந்து வரும் ’மாஸ்டா்’ படப்பிடிப்பில் நடிகா் விஜய் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டாா்.

லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கி விஜய் நடித்து வரும் படம் ’மாஸ்டா்’. விஜயின் உறவினரான சேவியா் பிரிட்டோ தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக தொடா்ந்து நடந்து வருகிறது. படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கம் மற்றும் அங்குள்ள அகன்ற சாலைகளில் படமாக்கப்பட்டு வந்தது. இங்கு படப்பிடிப்பு தொடங்கிய தினமே ’பிகில்’ படத்தின் வரவு, செலவு கணக்கிற்காக விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. இது தொடா்பான விசாரணைக்காக ’மாஸ்டா்’ படப்பிடிப்புத் தளத்துக்கே வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றாா்கள்.

விஜயிடம் விசாரணை நடத்திவிட்டு, மேலும் விசாரணைக்காக விஜயை அவரது காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்தாா்கள். விசாரணை நிறைவடைந்த நிலையில், நெய்வேலி சுரங்கத்தில் அனுமதி வாங்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழல் ’மாஸ்டா்’ படக்குழுவினருக்கு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் விஜய் வெள்ளிக்கிழமை கலந்துகொண்டாா். இதில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com