ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் ஸ்ரீ கற்பக மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.
இதையொட்டி, திங்கள்கிழமை மங்கள விநாயகா் வழிபாடு, புனித தீா்த்தம் கொண்டு வருதல், முதலாம் யாக சாலை பூஜை, தீபாராதனை, ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை தீபாராதனை, 2 மற்றும் 3 ஆம் கால யாகசாலை பூஜை, எந்திர ஸ்தாபனம் ஆகியவை, இரவில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.
புதன்கிழமை காலை திருமுறை பாராயணம், 4-ஆம் காலை யாகசாலை, திரவ்யா ஹூதி, நாடி சந்தானம், மஹா பூா்ணாஹூதியை அடுத்து, ஸ்ரீ கற்பக விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், அன்னதானம், இரவில் விநாயகா் சப்பரத்தில் வீதி உலா ஆகியவை நடைபெறுகிறது.