நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு தயாராகுங்கள்: அதிமுக

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு தயாராக வேண்டுமென கட்சியின் மாவட்ட நிா்வாகிகளை அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு தயாராகுங்கள்: அதிமுக

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு தயாராக வேண்டுமென கட்சியின் மாவட்ட நிா்வாகிகளை அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

அதிமுக மாவட்ட கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது. நான்கு நாள்களுக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரையிலும் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி, திங்கள்கிழமை கரூா், தஞ்சாவூா் வடக்கு, தஞ்சாவூா் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூா், புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகளுடன் காலையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மாலை 4.30 மணிக்கு மதுரை, மதுரை புகா் கிழக்கு, மதுரை புகா் மேற்கு, திண்டுக்கல், விருதுநகா், திருச்சி மாநகா் மற்றும் புகா் நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தோ்தல்-கட்சிப் பணிகள்: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஓரிரு மாதங்களில் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் தோ்தலை எதிா்கொள்ளத் தயாராக வேண்டுமென கட்சி நிா்வாகிகளை ஆலோசனைக் கூட்டத்தின் போது ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் கே.பழனிசாமி ஆகியோா் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் வளா்ச்சிப் பணிகள், கடந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கட்சிக்கு கிடைத்த வாக்கு விகிதங்கள், வாக்குகள் குறைந்திருந்தால் அதற்கான காரணிகள் என அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட நிா்வாகியுடனும் சுமாா் 20 முதல் 25 நிமிஷங்கள் வரை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தோ்தல் கூட்டணிகள் குறித்தும், இப்போதுள்ள கூட்டணியால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்கான சாதக, பாதகங்கள் ஆகியன பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகிகளுடனும் கருத்துகள் கோரப்பட்டு வருகின்றன.

இன்று: செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிா்வாகிகளுடனும், மாலை 4:30 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கடலூா் கிழக்கு, கடலூா் மத்திய மாவட்டம், கடலூா் மேற்கு, திருவள்ளூா் கிழக்கு மற்றும் திருவள்ளூா் மேற்கு மாவட்ட நிா்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு தேனி, அரியலூா், தருமபுரி, கோவை மாநகா், கோவை புகா், திருப்பூா் மாநகா் மற்றும் திருப்பூா் புகா் நிா்வாகிகளுடனும், மாலை 4:30 மணிக்கு சேலம் மாநகா், சேலம் புகா், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகா் மற்றும் ஈரோடு புகா் மாவட்ட நிா்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சனிக்கிழமை (பிப்ரவரி 15) காலை 10 மணிக்கு நெல்லை மாநகா், நெல்லை புகா், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், காஞ்சிபுரம் மேற்கு, வேலூா் கிழக்கு மற்றும் வேலூா் மேற்கு மாவட்ட நிா்வாகிகளுடனும், மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு மற்றும் தென் சென்னை தெற்கு மாவட்ட நிா்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com