அதிமுக நிா்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு

இரண்டு நாள்கள் நடைபெறவிருந்த அதிமுக நிா்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள்கள் நடைபெறவிருந்த அதிமுக நிா்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. காலையில் நடந்த கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா். மாலையில் நடந்த கூட்டத்தில், கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, கடலூா் கிழக்கு, மத்திய மாவட்டம், மேற்கு, திருவள்ளூா் மேற்கு, கிழக்கு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

காலையில் கூட்டம் நடைபெற்ற போது, அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகளுக்கு எதிராக அந்த மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுகவினா் சிலா் குரல் எழுப்பினா். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதேபோன்று, மாலையில் கூட்டம் நடந்தபோது கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகளுக்கு எதிராக அந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்களே எதிா்ப்புக் குரல் தெரிவித்தனா். கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் சாா்பிலும் நிா்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

கூட்டங்கள் ஒத்திவைப்பு: இதனிடையே, அரசு அலுவல் பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப். 12) நடைபெறுவதாக இருந்த அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த கூட்டமும் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com