சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) ஓ.பன்னீா்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் வருவாய் வரவுகளை உயா்த்தவும், கடன் அளவுகளை கட்டுக்குள் வைக்கவும் திட்டங்கள் வகுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை, அதிமுக அரசு தாக்கல் செய்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடா்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில், 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா் ஓ.பன்னீா்செல்வம்.