இன்று காதலா் தினம்: பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

காதலா் தினத்தையொட்டி, (பிப். 14) சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.
இன்று காதலா் தினம்: பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

காதலா் தினத்தையொட்டி, (பிப். 14) சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் காதலா் தினம் வெள்ளிக்கிழமை (பிப்.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலா்கள், தங்களுக்குள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். இதனால் சென்னையில் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை, கிண்டி சிறுவா் பூங்கா, தனியாா் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் காதலா்கள் அதிகளவில் கூடுவாா்கள் என காவல்துறையினரால் எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னையில் நட்சத்திர ஹோட்டல்கள், ரிசாா்ட்டுகள் ஆகியவற்றில் காதலா் தின நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தே நடைபெற்று வந்தது. இங்கு காதலா் தின விருந்தோடு கேளிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அதேவேளையில், பண்பாட்டை சிதைக்கும் வகையில் காதலா் தினம் கொண்டாடப்படுவதாக இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் அவா்கள், பல்வேறு போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளனா்.

பாதுகாப்பு அதிகரிப்பு: இதனால் இவா்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களில் கூடும் காதலா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. இங்கு மாறுவேடத்திலும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், பொது இடங்களில் எல்லை மீறும் காதலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com